Categories: CINEMA

“யாரும் பயப்படாதீங்க…” நடுக்காட்டில் சிக்கிய படக்குழு… தனியாளாக களத்தில் இறங்கி சம்பவம் செய்த நடிகையர் திலகம்…

1950, 60 மற்றும் 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகை சாவித்ரி. இவர்  1936ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி ஆந்திராவில் பிறந்தவர்.  1952ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்த அவர் தமிழ், கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார். நடிகையர் திலகம் பட்டம் பெற்றவர்.  ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். நடிகர் திலகம் என்று போற்றப்பட்ட சிவாஜி கணேசனே சாவித்ரியின் நடிப்பை பார்த்து மிரண்டு பயந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உச்ச நடிகையாக இருந்த சாவித்ரி காதல் மன்னன் ஜெமினி கணேசனை காதலித்து மணந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். சென்னையில் நீச்சல் குளத்துடன் பெரிய பங்களா கட்டிய முதல் நடிகை சாவித்ரி தான். கஷ்டம் ஏழைக் குடும்பத்தில் பிறந்து நடித்து சம்பாதித்து செல்வச் சீமாட்டியாக வாழ்ந்த அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி இறந்தார். சிவாஜியும், சாவித்ரியும் சேர்ந்து நடித்த பாச மலர் படம் காலத்தால் அழியாத காவியம் என்றே கூறலாம்.

எம்.ஜி.ஆரை போலவே தன்னிடம் இருந்ததை பலருக்கும் சாவித்ரி வாரி வழங்கும் குணம் கொண்டவராக இருந்தார். தற்பொழுது அவரின் வள்ளல் குணம் தொடர்பான ஒரு சம்பவம் இணையத்தில் வெளிவந்துள்ளது. அதாவது ஒருமுறை படப்பிடிப்புக்காக இரவு நேரத்தில் மைசூரின் ஒரு காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு குழுவினருடன் காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார் சாவித்ரி. அப்போது காட்டு யானைகள் அவர்களின் வாகனங்களை வழி மறித்தன. எனவே, காரை பின்னால் ஓட்டி சென்று தப்பித்தனர். அப்போதுதான் அங்கு வேறொரு ஆபத்து காத்திருந்தது.

கொள்ளையர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். உடனே, ‘யாரும் பயப்பட வேண்டாம்’ என சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கிய சாவித்ரி ‘நான் ஒரு நடிகை. படப்பிடிப்புக்காக போய் கொண்டிருக்கிறேன். இப்போது எங்களிடம் 5 ஆயிரம் மட்டுமே இருக்கிறது’ என சொல்லி அந்த பணத்தை அவர்களிடம் கொடுத்தார். அப்போது யானை பிரச்சனையை புரிந்து கொண்ட கொள்ளையர்கள் பல கிலோ மீட்டர்கள் படப்பிடிப்பு வாகனங்களுக்கு துணையாக வந்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். இப்படி நடுக்காட்டில் சிக்கிய படக்குழுவை தனியாளாக களத்தில் இறங்கி  யானை கூட்டத்திடமிருந்தும், கொள்ளையர்கள் கூட்டத்திடமிருந்திருந்தும் சமயோஜிதமாக யோசித்து காப்பாற்றியுள்ளார் இந்த வீரப்பெண்மணி.

Begam

Recent Posts

நாடகத்தில் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்திய நடிகர் RS மனோகர்… ஷாக் ஆகி MGR செய்த செயல்!

தமிழ் சினிமாவில் ஆரம்ப கால நடிகர்கள் அனைவரும் நாடக உலகின் பின்னணியில் இருந்து வந்தவர்கள். அதில் எம் ஆர் ராதா,…

2 hours ago

வெள்ளை கலர் சேலையில் மதி மயக்கும் திமிரு பட நடிகை.. புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

நடிகை ஸ்ரேயா ரெட்டி கடந்த 2002-ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஒரு பாடலுக்கு…

12 hours ago

சூர்யாவுடன் டிராப் அவுட்.. 2 முக்கிய நடிகர்களின் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் சுதா கொங்கரா..!!

பிரபல நடிகரான விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுவரை இல்லாமல் வித்தியாசமான கேரக்டரில் விக்ரம்…

12 hours ago

அடுத்த படத்திற்கு சிறுத்தை சிவாவுடன் இணையும் தல அஜித்.. சன் பிக்சர்ஸ் போட்டோ முக்கியமான கண்டிஷன்ஸ்.. இதுக்கு செட் ஆவாரா அஜித்..?

பிரபல நடிகரான அஜித் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தற்போது தயாரிப்பு நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக படபிடிப்பு…

13 hours ago

பேச்சிலர் 2-வில் நடிக்க போகும் SJ சூர்யா.. பேச்சிலர் 3-ல் 60 வயது நடிகர் தான் ஹீரோவாம்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன டார்லிங் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஜி.வி…

14 hours ago

தொடை அழகி ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலையே.. கிளாமர் புகைப்படங்களை இறக்கிய பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா…

17 hours ago