தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படமும் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது தனது 50 வது படமான ராயன் படத்தின் பணிகளில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார் தனுஷ்.
இந்தப் படத்தை தனுஷே இயக்கி, நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் ராயன் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டு திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளார். ராயன் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைப்பதாக நாம் ஏற்கெனவே பார்த்தோம். பொதுவாக ஏஆர் ரகுமான் படத்திற்கு இசையமைப்பதோடு நிறுத்திக் கொள்வார். எந்த ஒரு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கும் நேரடியாக கலந்து கொண்டது கிடையாதாம்.
ஆனால் தனுஷ் இயக்கும் ‘ராயன்’ படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக் அமைக்கும் போது இம்ப்ரஸ் ஆன அவர், அவ்வப்பொழுது படப்பிடிப்பை நேரில் சென்று கண்டு ரசித்து வருகிறாராம். இத்தகவலை அறிந்த ரசிகர்கள் ‘பின்ன சும்மாவா நடிப்பு அசுரன் இயக்கி நடிக்கும் படமில்லையா..? அப்படித்தாங்க இருக்கும்’ என்று கூறி வருகின்றனர்.
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…
பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…
நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது…
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் ஆசைப்பட்ட ஒரு படத்தை தான் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு காலமும் நேரம்தான்…
தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…
பாடல்களில் கிராமத்து இசையை புகுத்தி 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவையே தன் பாடல்களால் கட்டுக்குள் வைத்திருந்தவர் இசைஞானி இளையராஜா.…