10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…! ரூ.37,000 சம்பளத்தில் வங்கியில் வேலை ரெடி…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

By Devi Ramu on தை 2, 2026

Spread the love

இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ஃபெடரல் வங்கியில், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடிக்காதவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

மாதம் 19,500 ரூபாய் முதல் 37,815 ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படவுள்ள இப்பதவிக்கு, ஜனவரி 8, 2026-க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், கணினி குறித்த அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

   

தமிழகத்தில் சென்னை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இதற்கான எழுத்துத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

   

பொதுப்பிரிவினர் 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். வங்கிப் பணியில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி உரிய காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து இந்த ஜாக்பாட் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.