கொடூரம்..! காதலைக் கைவிடாத 19 வயது மகள்.. கழுத்தை நெரித்துக் கொலை.. முதுகில் உடலைக் கட்டி பைக்கில் எடுத்துச் சென்று 5 அடி பள்ளத்தில் புதைத்த தந்தை..!!

By Soundarya on வைகாசி 21, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், கௌரவக் கொலை என்ற பெயரில் தந்தை ஒருவரே தன் சொந்த மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கைர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பூரன் என்ற நபர், தனது 19 வயது மகள் பக்கத்து வீட்டு இளைஞனை ஓராண்டாகக் காதலித்து வந்ததை எதிர்த்துள்ளார். அந்தப் பெண் அதே இளைஞனைத் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததோடு, கடந்த ஒரு வாரமாக உணவருந்தாமல் பிடிவாதம் பிடித்துள்ளார். இதனால் தனது குடும்பக் கௌரவத்திற்குப் பங்கம் ஏற்படும் என்று கருதிய தந்தை, மகளைக் கொடூரமாகக் கொலை செய்யத் துணிந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமையன்று நள்ளிரவில் மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற பூரன், விடிவதற்குள் உடலைத் தனது முதுகில் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு ஐந்து அடி ஆழப் பள்ளம் தோண்டி உடலைப் புதைத்துவிட்டு, ஒன்றும் அறியாதது போல் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் மகள் மாயமானது போல் நாடகமாடி, அவளைத் தேடுவது போல் நடித்துள்ளார். ஆனால், அப்பகுதி மக்கள் பெண்ணின் காணாமல் போனது குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

   

சந்தேகத்தின் பேரில் போலீசார் தந்தையிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் போலீசாரின் சந்தேகம் வலுக்கவே, தீவிர விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, இறந்த பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட பூரன் காட்டிய இடத்திற்குச் சென்று, புதைக்கப்பட்ட பெண்ணின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.