கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லி பாளையம் பகுதியை சேர்ந்த காளியப்பன் (55) என்ற கூலி தொழிலாளியின் மனைவி இந்திராணி. இந்த தம்பதிகளுக்கு நந்தினி (17) என்ற மகள் உள்ள நிலையில் அவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே நந்தினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த தந்தை காளியப்பன், செல்போனை வைத்துவிட்டு தூங்கு என்று அவரை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த நந்தினி தன்னுடைய சித்தப்பா மகன் குணசேகரன் என்பவரிடம் தன்னை தந்தை திட்டி விட்டதாக செல்போனில் தொடர்பு கொண்டு கூறிவிட்டு விஷம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
