கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பெட்டதபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் அவருடைய தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி எட்டு மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் கதறி அழுதுள்ளார். பிறகே சிறுமியிடம் அவருடைய தாயும் மருத்துவர்களும் விசாரணை நடத்திய போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையான கதையை கண்ணீருடன் கூறியுள்ளார்.
அதனைக் கேட்டு மருத்துவர்களும் சிறுமியின் தாயும் ஆக்ரோஷம் அடைந்துள்ளனர். ஏனென்றால் அந்த சிறுமியை அவளுடைய தந்தையே கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது குறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சிறுமியிடம் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…