மகனின் காதலுக்குத் தந்தைக்குத் தண்டனையா..? செருப்பால் அடித்து, சிறுநீர் குடிக்க வைத்து… 70 வயது முதியவருக்கு நேர்ந்த கொடூரம்..!!

By Soundarya on சித்திரை 25, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் ராய்சேன் (Raisen) மாவட்டத்தில், சாதி மற்றும் கௌரவம் என்ற பெயரில் ஒரு முதியவர் மிகக் கொடுமையான முறையில் அவமதிக்கப்பட்டுள்ளார்.ராய்சேன் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும், தடையைத் மீறி அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.

மகன் காதலித்துத் திருமணம் செய்த ஆத்திரத்தை, அந்தப் பெண்ணின் உறவினர்கள் வாலிபரின் 70 வயது தந்தை மீது தீர்த்துக் கொண்டனர். அவர்கள் செய்த அநாகரீகச் செயல்கள்: முதியவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று ஒரு இடத்தில் அடைத்து வைத்தனர்.அவரைச் சூழ்ந்து கொண்ட கும்பல், செருப்பால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மனிதாபிமானமற்ற முறையில், அந்த முதியவரைச் சிறுநீர் குடிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். இவ்வளவு கொடுமைகளையும் செய்ததோடு நிற்காமல், அவரை அவமானப்படுத்துவதற்காக அந்த வீடியோவைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளனர்.