இந்தோனேசியாவில் உணவு விநியோகப் பெண்ணாக (Food Delivery Representative) பணிபுரியும் ஒரு இளம்பெண், தனது இருசக்கர வாகனத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளைச் சேர்த்து வருகிறார். அன்றைய தினம் அவருக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைத்தது. அந்த ஆர்டரின் மதிப்பு 4,70,000 இந்தோனேசிய ரூபியா (சுமார் 100 சவுதி ரியால்கள் அல்லது இந்திய மதிப்பில் சுமார் ₹2,500). அந்தப் பெண்ணிடம் இருந்த கடைசிப் பணம் அதுதான். வாடிக்கையாளர் உணவைப் பெற்றுக் கொண்டு பணத்தைத் தருவார் என்ற நம்பிக்கையில், தனது சொந்தப் பணத்தைச் செலுத்தி உணவை வாங்கினார்.
உணவை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்து வாடிக்கையாளரின் வீட்டை அடைந்தபோது, அவருக்குப் பேரிடியாக ஒரு செய்தி காத்திருந்தது. அந்த வாடிக்கையாளர் கடைசி நிமிடத்தில் அந்த ஆர்டரை ரத்து (Cancel) செய்தார். அந்தப் பணத்தை இழந்தால் அடுத்த வேளை உணவிற்கோ அல்லது பெட்ரோலுக்கோ கூட தன்னிடம் பணம் இல்லை என்பதை நினைத்து, அந்த இளம்பெண் நிலைதடுமாறி சாலையிலேயே அமர்ந்து கதறி அழத் தொடங்கினார்.
شابه اندونيسيه تعمل مندوبة توصيل طلبات الطعام على دراجتها النارية
جاها طلب من عميل وذهبت إلى المطعم واشترت الطلب كان بقيمة 470 الف روبية اندونيسي حوالي 100 ريال سعودي ودفعت الشابه من فلوسها وكان اخر مبلغ تملكه
وحين ذهبت بالطلب ووصلت الى منزل العميل قام بإلغاء الطلب الشابه ما… pic.twitter.com/bKPw7NcAbh
— مستر (@5_8fm) April 25, 2026
அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர், அந்தப் பெண் சாலையோரம் அமர்ந்து அழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். என்ன நடந்தது என்று விசாரித்தபோது, அந்தப் பெண் நடந்தவற்றை கண்ணீருடன் விவரித்தார்.இந்தச் சம்பவத்தை அந்த நபர் தனது அலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்தார் (இது போன்ற அநீதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர அந்தப் பெண்ணின் துயரத்தைப் போக்க நினைத்த அந்த நபர், உடனடியாக அந்தப் பெண் இழந்த முழுத் தொகையையும் அவரிடம் வழங்கினார். எதிர்பாராத இந்த உதவியால் அந்தப் பெண் அதிர்ச்சியிலும் நன்றியுணர்விலும் மீண்டும் அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு எதிராகப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
