ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரேஷ் என்பவர் தன்னிடம் வண்டிக்கான ஆவணங்கள் இல்லை என நினைத்து அச்சமடைந்து, தனது பைக்கை யாருக்கும் தெரியாமல் பக்கத்து தெருவில் மறைத்து வைத்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது 6 வயது மகன் மகேந்திரா, வெகுளித்தனமாக நேராக போலீசாரிடம் சென்று, அவர்களைக் கண்டதும் தன் தந்தை பைக்கை ஒளித்து வைத்துவிட்டதாகக் கூறி அவர்களையே அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
சிறுவன் காட்டிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பைக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வண்டிக்கான அனைத்து ஆவணங்களும் சரியாகவே இருந்தன. இதையடுத்து, சிறுவனின் கள்ளமில்லாத குறும்பையும் நேர்மையையும் அதிகாரிகள் மனதாரப் பாராட்டினர். தன் அப்பாவையே போலீசாரிடம் சிறுவன் மாட்டிவிட்ட இந்த சுவாரஸ்யமான நிகழ்வு அங்கிருந்தவர்களை வெகுவாகச் சிரிக்க வைத்தது மட்டுமின்றி, இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…
சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…