“ஐயோ என்னை விட்டுடுங்க” பழங்குடியின பெண்ணை திருமணம் செய்த மகன்… மருமகளை ஓட ஓட விரட்டி மாமனார் செய்த கொடூரம்…!!

By Soundarya on ஐப்பசி 22, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலம் கெர்கே  கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் . ஓட்டுனரான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராவணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு சேகரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் சேகர் தன்னுடைய மாமியார் மாமனார் உடன் சேர்ந்து சமையல் செய்வதற்கு தேவையான விறகு சேகரிக்க காட்டு பகுதிக்கு சென்ற போது சேகரின் தந்தை சாத்தையா மருமகள் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

பிறகு தான் வைத்திருந்த கோடரியை எடுத்து மருமகளை வெட்ட பாய்ந்துள்ளார். அதில் அவருடைய கழுத்தின் பின்பகுதியில் வெட்டுபட்டுள்ளது. பிறகு அவரை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளார். இதில் ராவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணின் மாமனாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.