உன் கூட வாழ எனக்கு விருப்பம் இல்ல… மனைவி சொன்ன வார்த்தை… துடிதுடிக்க இரண்டு பிஞ்சு குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…!

By Nanthini on கார்த்திகை 8, 2025

Spread the love

பண்ருட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்த ராஜா (40) என்ற விவசாயி மனைவி, மகன் மற்றும் மகளுடன் பண்ருட்டியில் வசித்து வந்தார். இதனிடையே ராஜாவுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ராஜாவின் மனைவி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மகன் மற்றும் மகளுடன் ராஜா வசித்து வந்த நிலையில் குடும்பம் நடத்த வருவதற்கு மனைவி மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா இன்று தன்னுடைய மகன் குமரகுரு (12) மற்றும் மகள் தனியா ஸ்ரீ (7) ஆகியோருடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நண்பர்களுக்கு செல்பி புகைப்படத்துடன் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் மூன்று பேருடைய உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவ்குகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.