“இனிமே இந்த வாழ்க்கை வேண்டாம்”… 6 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை செய்த விபரீதம்…. வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!

By Nanthini on தை 18, 2026

Spread the love

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கடன் தொல்லையால் தந்தை ஒருவர் தனது 6 வயது மகளை விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த பவிசங்கர் (33), வேலை இழப்பால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இச்சம்பவம் நடந்தபோது அவரது மனைவி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், இரவு வீடு திரும்பிய அவர் கதவு திறக்கப்படாததைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, படுக்கையறையில் சிறுமி வாசுகி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்; பவிசங்கர் மின்விசிறியில் சடலமாகத் தொங்கியது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில், மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற பின்னரே பவிசங்கர் தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து எளமக்கரா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், வறுமை மற்றும் கடன் சுமையால் ஒரு குடும்பமே சிதைந்து போனது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.