உத்தரபிரதேச மாநிலத்தில் தந்தை ஒருவரே தன் பெற்ற மகளை ஆணவக் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரம் காரணமாக ஆத்திரமடைந்த தந்தை இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, அந்த பதின்பருவ (டீனேஜ்) பெண் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் தந்தை கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எச்சரித்த பின்னும் மகள் கேட்காததால், ஆத்திரமடைந்த தந்தை அவரை அடித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், கொலையை மறைப்பதற்காக மகளின் உடலை துண்டு துண்டாக வெட்டி மூட்டைகளில் கட்டியுள்ளார். அந்த மூட்டைகளை ஓடும் ரயிலில் வீசி எறிந்துள்ளார். ரயில்வே தண்டவாளம் மற்றும் ரயில் பெட்டிகளில் இருந்து உடற்பாகங்கள் மீட்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடூர தந்தையை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சமீபத்திய வாரங்களில் இல்லாத அளவுக்கு…
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை…
உடல்நலக்குறைவு காரணமாகக் கோவை கே.எம்.சி.ஹெச் (KMCH) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து மருத்துவக்…
தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் எஃகுக் கோட்டையாகக் கருதப்பட்ட…
தமிழக அரசியல் களம் தற்போது புதிய அமைச்சர்களின் வருகையாலும், அவர்களின் ஆரம்பக்கட்ட செயல்பாடுகளாலும் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள்…
முன்னதாக நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவின் வெற்றிக்கு மோடியோ அல்லது அமித்ஷாவோ காரணமல்ல, காங்கிரஸ்தான்…