நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தந்தை ஒருவர் மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துவிட்டு பின் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு திருமணமாகி 4 பிள்ளைகள் உள்ளார்கள். இந்நிலையில் இவர் வீடு கட்ட வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இதனால் சம்பவத்தன்று மனைவி மற்றும் மகனை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு, 9, 7, 3 வயதுடைய மூன்று மகள்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். பிறகு தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
