கோழிக்கு தீனி இட்டபோது நடந்த சோகம்.. 26 அடி மலைப்பாம்பின் வயிற்றுக்குள் விவசாயியின் உடல்.. ஆடிப்போன கிராம மக்கள்..!

Spread the love

இந்தோனேசியாவில் 26 அடி மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து விவசாயி ஒருவரின் உடல் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் தெற்கு கிழக்கு சுலவெசி பகுதியில் உள்ள ஒரு மலை கிராமத்தில் 61 வயதான விவசாயியை 26 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது. அந்த விவசாயி தனது கோழிகளுக்கு தீனி போடும்போது புல்வெளியில் இருந்த பாம்பு அவர் மீது பாய்ந்து அவரது காலை கடித்து பிடித்து பின்னர் உடலை நசுக்கி முழுவதுமாக விழுங்கியுள்ளது. அன்று அவர் வீடு திரும்பவில்லை என்பதால் குடும்பத்தினர் அனைவரும் தீவிரமாக தேடி உள்ளனர்.

சாலையோரம் அவரது மோட்டார் சைக்கிள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தீவிரமாக தேடிய நிலையில் அங்கிருந்த குடிசை ஒன்றுக்கு அருகே வயிறு வீக்கம் கொண்ட ஒரு மலைப்பாம்பை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனைப் பிடித்து வெட்டிப் பார்த்தபோது அதில் உடை அணிந்த நிலையில் விவசாயியின் உடல் இருந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் தற்போது முதல் முறையாக நடந்துள்ளது.. பாம்புகள் சமீபகாலமாக வீடுகளிலும் தோட்டங்களிலும் அதிகமாக காணப்படுவதாகவும், மக்கள் தனியாக காட்டுக்குள் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

திமுக கோட்டையை தகர்க்கும் விஜய்?… 14 தொகுதிகளில் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்… ஆடிப்போன அரசியல் கட்சிகள்…!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தாக்கம் அரசியல் களத்தில் பெரும்…

3 minutes ago

“சின்ன தம்பி உன்னை நம்பி…” விஜய்க்காக இளையராஜா போட்ட ஸ்கெட்ச்?…. 2026 தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கசிந்த ரகசியம்..!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன்…

8 minutes ago

“இதெல்லாம் ஒரு வதந்தியா?”… மணமகனுக்கு இது 3வது கல்யாணமா?… தாலி கட்டும் நேரத்தில் நின்ற திருமணம்! உ.பி-யில் பரபரப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், ஒரு சிறிய வதந்தியால் கோலாகலமாக நடக்கவிருந்த திருமணம் பாதியிலேயே நின்ற சம்பவம் பெரும்…

12 minutes ago

“இந்தியாவில் ‘ஜாம்பி’ ஊடுருவல்?… இளைஞர்களை நடைப்பிணமாக்கும் அந்த கொடூர போதை… நெஞ்சை பதறவைக்கும் காட்சி”…!!!

இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக, 'ஜாம்பி டிரக்' போன்ற…

23 minutes ago

“வெளியே உன் கார் நிக்குதுடா” பொய் சொன்ன காதலனை நடுரோட்டில் வைத்து… ஹோட்டல் ரூமில் காதலன் செய்த ‘அந்த’ காரியம்…!!

நள்ளிரவு 12 மணி இருக்கும், தன் காதலனிடம் ஏற்பட்ட மனக்கசப்பிற்காக மன்னிப்பு கேட்க எண்ணிய ஒரு இளம் பெண், நேராக…

26 minutes ago

நிஜமாகவே அவர் ஆம்பளதானா..? “ஒரு வருஷமா என்ன தொடக்கூட இல்ல” ரகசிய கேமரா வைத்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோலாகலமாக நடந்த ஒரு திருமணம், தற்போது…

32 minutes ago