திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த சந்தானத்துக்கு லட்டு கொடுத்த ரசிகர்… வீடியோ இதோ..!

By Soundarya on கார்த்திகை 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் தான் நடிகர் சந்தானம். தற்போது இவர் வளரும் ஹீரோவாக இருக்கிறார். அதுவும் விஜய் டிவியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சியில் ஒன்றுதான் லொள்ளு சபா. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்று கூறலாம். அடுத்த வாரம் ரிலீஸ் ஆகக்கூடிய படங்கள் அனைத்தையும் காமெடியாக சித்தரித்து தொகுத்து வழங்குவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

The actor lodged a complaint with the Commissioner of Police against Santhanam

   

அந்த நிகழ்ச்சியில் நடித்த நடிகர்கள் தான் இன்றைய சினிமாவில் பல முக்கிய அந்தஸ்தை பெற்ற நடிகர்களாக உள்ளனர். அவர்களில் சந்தானம், யோகி பாபு மற்றும் சுவாமிநாதன் ஆகிய நடிகர்களும் அடங்குவார்கள். அதிலும் இவர் நடிகர் ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், விஷால் ஆகியோருடன் சேர்ந்து நடிக்கும் படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக நகைச்சுவை செய்யக்கூடிய ஒரு நடிகர். அதிக அளவில் ஆர்யாவுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

   

#image_title

 

மேலும் கண்ணால் லட்டு திங்க ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்ததை தொடங்கி இனி நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கூறிய சந்தானம் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். இருப்பினும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது .

#image_title

உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 40 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. தில்லுக்குதுட்டு என்ற திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக தான் டிடி ரிட்டன்ஸ் வெளியானது. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் அதாவது டிடி ரிட்டன்ஸ் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் நேற்று சந்தானம் திருப்பதியில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அடிக்கடி திருப்பதிக்கு வருவதுதான். இந்த முறை டிடி ரிட்டன்ஸ் அடுத்த பாகம் நல்ல படியாக முடிந்து வெற்றியடைய வேண்டிவிட்டு வந்தேன்.