எதிர்நீச்சல் தொடரின் மூலம் பிரபலமான நடிகர் இயக்குனர், மாரிமுத்து(57) மாரடைப்பால் காலமானார். இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கதாகும். சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரிமுத்து மயங்கி விழுந்தார். அவரை வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து அரண்மனைக்கிளி, நடித்த படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். நடிகர் மாரிமுத்து 2008-ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான “யுத்தம் செய்” திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் கண்ணும் கண்ணும், புலி வால் ஆகிய படங்களை மாரிமுத்து இயக்கியுள்ளார். பிரபல இயக்குனர்களான மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். நடிகர் மாரிமுத்து வாலி, சண்டை கோழி, பைரவா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…
உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…
ஆக்ரா எக்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 6:30…
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…
மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…
தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…