உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமோசா என்றால் மிகவும் பிடிக்குமாம். அவருடைய கணவனிடம் சமோசா வாங்கி வருமாறு கூறியுள்ளார். இருப்பினும் அவர் மறந்து போய் வாங்காமல் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. உடனே அப்பெண் பெற்றோர்களிடம் ஃபோன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவர்கள் வந்தவுடன் இரு வீட்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் பெண்ணின் கணவரையும் மாமனாரையும் பெண் வீட்டார் சரமாக தாக்கியுள்ளனர்.
இதோடு முடியாமல் மறுநாள் பஞ்சாயத்து வரை இந்த விஷயம் சென்றுள்ளது. பஞ்சாயத்திலும் பெண் வீட்டார் மாப்பிள்ளையை அடிபோட்டு தாக்கியுள்ளனர். அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் சமோசாக்காக ஒரு குடும்பமே சண்டை போடுது என்று கிண்டலாக பேசி வருகிறார்கள்.
यूपी के पीलीभीत में समोसा नहीं खिलाने पर एक पति की जान सांसत में आ गई। बीवी ने पंचायत बुलाई। फिर अपने परिजनों के साथ मिलकर पति और उसकी मां की पिटाई कर दी। #pilibhit #samosa #upnews pic.twitter.com/7kebdJFEFD
— Pawan Kumar Sharma (@pawanks1997) September 4, 2025
