“அப்பாஜி” வேடத்தில் காமவெறி! சிறுமிகளுக்கு வலைவீசிய போலி சாமியார்..கர்நாடகாவை உலுக்கும் விவகாரம்..!!

Spread the love

கர்நாடக மாநிலம் யாத்கீர் மாவட்டம் ஷாஹாபூரைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா முத்தவா, தன்னை ஒரு ஆன்மீகவாதியாகவும் “வாழும் சாமியார்” என்றும் அடையாளப்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வந்துள்ளார். கையில் வெள்ளை புறாக்களை ஏந்தி, அமைதியின் தூதுவர் போன்ற பிம்பத்தைக் கட்டமைத்த இவர், தன்னை நாடி வருபவர்களின் தீராத நோய்களையும் கஷ்டங்களையும் போக்க வல்லவர் எனப் பிரசாரம் செய்துள்ளார். இவர் கூறிய சில கணிப்புகள் தற்செயலாகப் பலித்ததால், அந்தப் பகுதி மக்கள் இவரை “அப்பாஜி” என அழைத்து, வீடுகளில் இவரது புகைப்படத்தை வைத்துப் பூஜிக்கும் அளவிற்கு முட்டாள்தனமாக நம்பியுள்ளனர்.

அமைதிப் புறாவாக வலம் வந்த மல்லிகார்ஜுனாவின் முகத்திரை, சமீபத்தில் அவர் செய்த அருவருக்கத்தக்கச் செயல்களால் கிழிந்துள்ளது. ஆசி வழங்குவதாகக் கூறி, பக்திப் பரவசத்தில் இருக்கும் பெற்றோர்கள் முன்னிலையிலேயே சிறுமிகளிடம் இவர் அத்துமீறியுள்ளார். புனிதமான இடமாக மக்கள் கருதும் சூழலில், சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அதனைத் தட்டிக் கேட்க முடியாதபடி ஆன்மீகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு தனது கோக்குமாக்கு வேலைகளைத் தொடர்ந்துள்ளார். இந்த அத்துமீறல்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் புகார்கள் சமூக வலைதளங்களில் கசிந்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் குழந்தைகள் நல அமைப்பின் கவனத்திற்குச் சென்றதும், அவர்கள் உடனடியாகக் களத்தில் இறங்கினர். சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மல்லிகார்ஜுனா செய்த அநாகரிகச் செயல்கள் உறுதி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நல அமைப்பு அளித்தப் புகாரின் அடிப்படையில், யாத்கீர் போலீசார் மல்லிகார்ஜுனா முத்தவா மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆன்மீகத்தின் பெயரால் குழந்தைகளைச் சிதைக்க முயன்ற இந்த போலிச் சாமியாரின் செயல் கர்நாடகாவையே அதிரவைத்துள்ளது.

தற்போது போலீஸ் பிடியில் இருக்கும் மல்லிகார்ஜுனா மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நம்பிக்கையைப் முதலீடாக வைத்துச் சிறுமிகளின் வாழ்வைச் சிதைக்கத் துணிந்த இவருக்கு, இந்த போக்சோ வழக்கு மூலம் உரிய “எண்டு கார்டு” போடப்படுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆன்மீகப் போர்வையில் ஒளிந்திருக்கும் இதுபோன்ற சமூக விரோதிகளை அடையாளம் கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.

Muthu Mani

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

8 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

9 மணத்தியாலங்கள் ago