“பிளாக் பண்ணா விடமாட்டேன்!”.. பெண்ணின் போட்டோவை AI மூலம் ஆபாசமாக மாற்றிய போலி சாமியார்.. அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!!

Spread the love

சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்மீக போர்வையில் ஒளிந்திருந்த ஒரு காமுகனிடம் ஏமாந்து, பின் சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு அவனைக் கம்பி எண்ண வைத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த அப்பெண்ணிற்கு, சமூக ஊடகம் வழியாக சுமித் சர்மா என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். தன்னை ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் என்று கூறிக் கொண்ட சுமித், ஆரம்பத்தில் கடவுள், தியானம் என மங்களகரமாகப் பேசி அப்பெண்ணின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். ஆனால், நாளடைவில் தனது சுயரூபத்தைக் காட்டிய அவன், பெண்ணிடம் ஆபாசமாகப் பேச முயன்றதுடன் தன்னோடு நெருக்கமாகப் பழகுமாறும் வற்புறுத்தியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக அவனுடனான தொடர்பைத் துண்டித்து, சமூக வலைத்தள பக்கங்கள் அனைத்திலும் அவனை ‘பிளாக்’ செய்துள்ளார்.

தன்னை அந்தப் பெண் புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த சுமித், அதற்குப் பழிவாங்க நினைத்து கொடூரமான செயலில் இறங்கியுள்ளான். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அப்பெண் மற்றும் அவரது தாயாரின் புகைப்படங்களைத் திருடிய அவன், ‘ஏஐ’ (AI – Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை ஆபாசப் படங்களாகச் சித்திரரித்துள்ளான். அதுமட்டுமன்றி, இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்), யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய தளங்களில் அப்பெண்ணின் பெயரிலேயே 10 போலி கணக்குகளைத் தொடங்கி, இந்த ஆபாசப் படங்களை இணையத்தில் உலவ விட்டுள்ளார். இதைக் கண்டு ஒட்டுமொத்த குடும்பமும் மனமுடைந்து போன நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக அகமதாபாத் சைபர் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், டெல்லியில் பதுங்கியிருந்தபடியே அடுத்த பெண்ணை ஏமாற்றத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த சுமித் சர்மாவைத் தட்டித் தூக்கி அதிரடியாகக் கைது செய்தனர். ஆன்மீகத்தின் பின்னால் மறைந்து கொண்டு பெண்களிடம் அடிமட்ட லெவலில் அட்டூழியம் செய்து வந்த இந்த போலி சாமியாரின் கைது சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முன்பின் தெரியாத நபர்களிடம் பழகும் போதும், சமூக வலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களைப் பகிரும் போதும் பெண்கள் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Muthu Mani

Recent Posts

“அதிமுகவில் வெடித்த ஜாதி அரசியல் சண்டை”… வேலுமணிக்கு கல்தா கொடுக்க ஸ்கெட்ச் போட்ட கே.பி.முனுசாமி… அடுத்த பரபரப்பு…!

அதிமுகவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோருக்கு…

4 minutes ago

“உனக்கு எல்லாமே செஞ்சேனே”.. கோவில் வாசலில் காதலனுடன் நின்ற மகளின் காலில் விழுந்து அழுத தந்தை.. கலங்கும் இணையதளம்..!!

காதலனைத் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, கோவிலில் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் ஒரு மகள். சரியாக அந்த…

4 minutes ago

“நான் பார்த்துக்குறேன் நண்பா”… துயரத்திலும் நெகிழ வைத்த நட்பு… அஜித்தின் கார் பயணத்தின் போது விஜய் கொடுத்த அந்த உருக்கமான வாக்குறுதி…!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரின் தாயார் அண்மையில் இயற்கை எய்தினார். இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்தத்…

10 minutes ago

ஒரு இரவுக்கு 35 லட்சமா?.. அண்டை வீட்டுப் பெண் கொடுத்த ஆபரேஷன்.. மனைவியையே விலை பேசிய கணவன்.. நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்த சம்பவம்..!!

மஞ்சள் நிற மேலாடை அணிந்திருந்த ரீமா, தனது அண்டை வீடான அமித்தின் வீட்டிற்குச் சென்று அந்த அதிர்ச்சியூட்டும் கோரிக்கையை வைத்தபோது,…

11 minutes ago

“அமெரிக்கா செய்த தவறு.. 60 நிமிடத்தில் ஈரான் காட்டிய விஸ்வரூபம்”… மொத்தமும் சர்வ நாசம்… நடுங்கும் உலக நாடுகள்…!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ராணுவ தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடையத்…

17 minutes ago

கேஷ் இல்லனா என்ன.. UPI பண்ணு!.. லஞ்சம் வாங்கிய டிராபிக் போலீசின் முகத்திரையைக் கிழித்த இளைஞர்கள்.. கொந்தளித்த நெட்டிசன்கள்..!!

சமீபத்தில் சில இளைஞர்களைப் பிடித்த போக்குவரத்துப் போலீஸார், அவர்களிடம் லஞ்சமாகப் பணத்தைக் ரொக்கமாகக் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அந்த இளைஞர்கள்…

19 minutes ago