தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் சிறப்பு கதாபாத்திரம் என சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று அற்புதமாக நடிக்க கூடிய திறமை கொண்டவர். மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு இனிமேல் ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக விஜய் சேதுபதி கூறி இருந்தார். இவருடைய நடிப்பில் இறுதியாக விடுதலை 2 திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ட்ரெயின் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் விலங்கியல் இதனைத் தவிர விஜய் சேதுபதியின் கைவசம் மூன்று திரைப்படங்கள் இருப்பதால் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே சமயம் சமீபத்தில் இவர் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தார். கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த அறிவிப்பானது உகாதி திருநாளில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனதக்காகவும் அறிவிப்பு வெளியானது.
நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் உணர்வுப்பூர்வமான கதை, அழுத்தமான பாத்திரம், விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது.
மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகர் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று கசிந்துள்ளது. அதன்படி வேலைக்காரன் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பிறகு சூப்பர் டூலெக்ஸ், மாமன்னன், புஷ்பா போன்ற அதிரடி படங்களில் அதிரடி வில்லனாக நடித்து வரும் மிகப்பெரிய மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…