சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக நிர்வாகி நமீதா கலந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நமிதா, யோகா ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலை கட்டுப்பாட்டோடு வைத்த பிறகுதான் யோகா பற்றி அனைவருக்கும் தெரிந்தது.
அதனால் அனைவரும் முடிந்த அளவிற்கு யோகா செய்ய வேண்டும். அப்படி செய்வது மனதிற்கு உடலுக்கும் நல்லது. என்னுடைய குழந்தைகளோட நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. என்னுடைய தாய் மொழியில் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலம் தெரிந்தால் நல்லது தான். ஆனால் அதற்கு முன்பாக நம்முடைய தாய்மொழி என்பது அவசியம். என்னுடைய குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் எல்லாம் தெரியாது. அவங்களுக்கு தெரிந்தது ஜெய் அனுமான் மட்டும்தான். இதனை இந்த இடத்தில் நான் பெருமையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று நமீதா பேசியுள்ளார்.
