இனி ரூ.500 நோட்டுக்கள் செல்லாது?… உடனே வாபஸ்… தீயாய் பரவும் செய்திக்கு மத்திய அரசு விளக்கம்…!

Spread the love

இந்தியாவில் வருகின்ற 2025 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகின்றது. 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இப்படியான சூழலில் மீண்டும் ஒரு பண மதிப்பிழப்பு நடவடிக்கை தயாராகுமாறு சமூக வலைத்தளத்தில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது.

வாட்ஸ் அப்பில் பரவி வரும் ஒரு தகவலில் ரிசர்வ் வங்கி 2025 செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்குவதை நிறுத்தும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 75 சதவீதம் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அக்டோபர் மாதத்திற்குள் குறைக்க வேண்டும் என்றும் 90% புழக்கத்தை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குறைக்க வேண்டும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏடிஎம்களில் இனி 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் எனவும் பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள 500 ரூபாய் நோட்டுக்களை செலவழித்து விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை முற்றிலும் போலியானது என்பதை மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பு குழு உறுதி செய்துள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லும் எனவும் இது போன்ற வதந்திகளை மக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

Nanthini

Recent Posts

“தேர்தல் வெற்றி நம் பக்கம்” திருப்பதியில் நடிகை திரிஷா கொடுத்த ரியாக்ஷன்… வைரலாகும் வீடியோ..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற நடிகை த்ரிஷாவைச் சுற்றி அரசியல் குரல் ஒலித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை சுப்ரபாத…

3 minutes ago

“கைநிறைய வட்டி!… வெறும் ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. ரூ.2 லட்சம் வட்டி…. போஸ்ட் ஆபீஸின் செம்ம மாஸ் திட்டம்”…!!!

பாதுகாப்பான மற்றும் உறுதியான லாபம் தரும் முதலீடுகளைத் தேடுபவர்களுக்கு அஞ்சலகத்தின் 'நேர வைப்புத் திட்டம்' (Post Office Time Deposit…

4 minutes ago

“துப்பாக்கியால் அவள் அந்தரங்க உறுப்பில் சுட்டேன்” கல்யாணமாகி 2 வருஷம் ஆச்சு எதுவுமே நடக்கல… அன்னைக்கு நடந்த அந்த விஷயம்… மனைவி கொலையில் கணவன் பரபரப்பு வாக்குமூலம்..!!

திருமணமான பின்னரும் தனது முன்னாள் காதலனுடன் மனைவி உறவைத் தொடர்ந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் அந்தரங்க உறுப்பில் மூன்று…

9 minutes ago

தூக்கமில்லா இரவுகள்… தமிழக அரசியல் தலைவர்கள் நேற்றிரவு செய்த ‘அந்த’ காரியம்… வெளியான அந்த ரகசியம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் ஒருவித…

10 minutes ago

“இத்தனை நாளா இது தெரியாம போச்சே!… ஏசி ரிமோட்டில் இருக்கும் அந்த ‘மேஜிக்’ பட்டன்!… ஒருமுறை அழுத்தினால் போதும்.. மின்சார பில் பாதியாகக் குறையும்”….!!!

கோடைக்கால வெப்பத்தைத் தணிக்க ஏசி (AC) இன்றியமையாததாகிவிட்ட நிலையில், அதன் செயல்திறனைத் தக்கவைக்க முறையான பராமரிப்பு மிகவும் அவசியம். ஏசியில்…

14 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… ரிசல்ட் நாளில் திரிஷா போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு… குஷியில் தவெக தொண்டர்கள்!…!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் நட்சத்திர வேட்பாளரான நடிகர் விஜய்…

16 minutes ago