இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) விரைவில் குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக நிதி தொழில்நுட்ப நிறுவனமான நெட்நொர்க் பீப்பிள் சர்வீஸஸ் டெக்னாலஜீஸ் (N.P.S.T.) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் மிஸ்கால்பே டிஜிட்டல் பேமென்ட் தளத்துடன் இணைந்து இந்த வசதியை வழங்கும்.
இந்தியாவில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் யு.பி.ஐ. பயன்படுத்துகின்றனர். ஆனால் பட்டன் போன்கள், டிஜிட்டல் அறிவில்லாதவர்கள், இணையமில்லாத தொலைதூர பகுதி மக்கள் ஆகியோருக்கு இது சிரமம். இதனால் 85 கோடி பேர் யு.பி.ஐ. கட்டமைப்புக்கு வெளியே உள்ளனர்.
இவர்களை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்க் மற்றும் NPCI இணைந்து 2022ல் ‘UPI 123PAY’ சேவையை தொடங்கின. இது இணையமின்றி பயன்படுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
