2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, விருப்ப மனு அளிக்கத் தவறியவர்கள் மற்றும் கூடுதல் தொகுதிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 2025 டிசம்பர் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
