“அடேய் அவ என் பொண்டாட்டி டா”…. துப்பாக்கி முனையில் மணமகளை கடத்திய காதலன்… மாப்பிள்ளை திகைக்க நடுரோட்டில் நடந்த அந்த 5 நிமிட திக் திக் நிமிடங்கள்….!

By Nanthini on மாசி 23, 2026

Spread the love

ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன், மணமகள் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தர்பா சாலை பகுதியில் மர்ம நபர்கள் மூவர் இவர்களது வாகனத்தை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள், அந்த கும்பல் அதிரடியாகச் செயல்பட்டது.

கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி அனைவரையும் மிரட்டிய அந்த கும்பல், மணமகளை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தது. பட்டப்பகலில், கணவன் மற்றும் உறவினர்கள் கண்முன்னே மணமகள் கடத்தப்பட்டதை கண்டு மணமகன் ஹரிபந்து பட்டேல் மற்றும் உறவினர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த துணிகரச் சம்பவம் குறித்து உடனடியாக தர்பா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

   

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மணமகளைக் கடத்திச் சென்றது அந்தப் பெண்ணின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்தது. காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல், தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். தப்பியோடிய கடத்தல் கும்பலையும், மணமகளையும் மீட்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.