BIG BREAKING: CM விஜய் காலில் விழுந்தாலும் இடமில்லை…. இரவோடு இரவாக பரபரப்பு அறிவிப்பு..!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ரவுடி கும்பல்களால்தான் தென் தமிழகம் தனது அமைதியை இழந்து தவிப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், அவர் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய்யின் காலில் போய் விழுந்தாலும் கூட, அவரைப் போன்ற நபர்களை ஒருபோதும் தவெகவில் சேர்க்க மாட்டோம் என்று மிகத் தீர்க்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த காலங்களில் காவல் துறை விசாரணையின்போது அச்சத்தால் உடையில் சிறுநீர் கழித்த நபர்களை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம் என்று அனிதா ராதாகிருஷ்ணனை மறைமுகமாக ஏளனம் செய்த அமைச்சர் நிர்மல்குமார், சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.