Categories: சினிமா

பிரமாண்ட திருமண மண்டபம் கட்டிய பிரபல சீரியல் நடிகை.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

Spread the love

பொதுவாகவே சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து சம்பாதிக்கும் நடிகர் நடிகைகள் அதனை தொழிலில் முதலீடு செய்து நன்கு லாபம் பார்த்து வருகிறார்கள். அதன்படி திருமண மண்டபம் கட்டி அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய நடிகர் நடிகைகள் வெகு சிலர் மட்டுமே. நடிகர் விஜய்க்கு சொந்தமாக சென்னையில் பல இடங்களில் திருமண மண்டபங்கள் உள்ளது. அதற்கு லட்சக்கணக்கில் வாடகை வாங்கி தளபதி சம்பாதித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது எதிர்நீச்சல் சீரியல் நடிகையும் திருமண மண்டபம் ஒன்றை சொந்தமாக கட்டியுள்ளார்.

சன் டிவியில் சக்கை போடு போட்ட சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியலும் ஒன்று. திருச்செல்வம் இயக்கியிருந்த இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவுக்கு வந்தது. டிஆர்பியில் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தை பிடித்த சீரியல். அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் விறுவிறுப்பான கதைக்களமும் அதில் நடித்த நடிகர்களும் தான்.

இந்த சீரியலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் தான். அப்படி எதிர் நீச்சலில் பரபரப்பாக பேசப்பட்ட ஆதிரை கேரக்டரில் நடித்தவர்தான் சத்யா தேவராஜன். இவர்தான் தற்போது சொந்தமாக புதிய பிசினஸ் தொடங்கியுள்ளார். எதிர்நீச்சல் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து ஒரு பிரம்மாண்ட கல்யாண மண்டபத்தை கட்டி அதற்கு கிரகப்பிரவேசம் சத்யா நடத்தியுள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சத்யா, எனது குடும்பத்தின் உதவியாள் என் காதல் கணவருடன் சேர்ந்து எங்கள் கனவை நினைவாக்கியுள்ளோம், வெங்கடாசலபதி பேலஸ் என்ற பெயரிட்டுள்ள இந்த திருமண மண்டபத்துக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

யோவ் நிறுத்துயா… காரில் சிக்கிய பைக்கை… அலற அலற அரை கி.மீ இழுத்துச் சென்ற முதியவர்… டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!!

தெற்கு டெல்லியின் ஆர்.கே. புரம் பகுதியில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் அதிவேகமாக வந்த ஹோண்டா அமேஸ் கார் ஒன்று,…

8 minutes ago

நடுவானில் பரபரப்பு…! “சட்டை கிழிந்து தொங்க விமானத்தில் கடும் சண்டை…” 100-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் ஆபத்தில்…! திக் திக் வீடியோ வைரல்…!!

நூற்றுக்கணக்கான பயணிகளுடன் நடுவானில் அதிவேகத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில், எதிர்பாராதவிதமாகப் பயணிகள் சிலருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. சீட்…

19 minutes ago

டேய் அங்க பாருடா… எவ்ளோ பெரிய பாம்பு?… நள்ளிரவில் ஐடி நிறுவன வாசலில்… புகுந்த ராட்சச மலைப்பாம்பு… பதறிப்போன ஊழியர்கள்… பதறவைக்கும் வீடியோ…!!

ஹைதராபாத்தில் உள்ள துர்க்கம் செருவு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்திற்கு வெளியே, செப்டம்பர் 17…

24 minutes ago

ஐயோ கடவுளே… கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலிருந்து பறந்து விழுந்த கார்… துடிதுடித்து பரிதாபமாக உயிரை விட்ட இளம்பெண்… பெங்களூரில் அரங்கேறிய கோர விபத்து…!!

பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் மண்டியா அருகே உள்ள உம்மடஹள்ளி கேட் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச்…

31 minutes ago

நாட்டை உலுக்கிய நிதாரி வழக்கு…! உண்மைகளை மூடி மறைக்க கொன்றுவிட்டார்களா…? குற்றவாளி உயிரிழந்ததில் பின்னணி என்ன…? 15 வயது சிறுமியின் தந்தை எழுப்பிய பகீர் சந்தேகம்…!

இந்திய வரலாற்றையே உலுக்கிய 2006-ஆம் ஆண்டின் 'நிதாரி தொடர் கொலை வழக்கு' குற்றவாளியான சுரேந்தர் கோலி, ஹரித்வாரில் உயிரிழந்ததாக வெளியான…

38 minutes ago

ஐயோ… கண்ணிமைக்கும் நேரத்தில் ஊரே அழிஞ்சிருச்சு… மலை கிராமத்தையே விழுங்கிய மாபெரும் நிலச்சரிவு… சீனாவில் நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் செப்டம்பர் 16 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து…

42 minutes ago