அதிமுகவில் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது, கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’வின் நிறுவனர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டு, இன்று அந்த இடத்தில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் அச்சிடப்பட்டு வெளியானது கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமியால் அண்மையில் நியமிக்கப்பட்ட புதிய மாவட்டச் செயலாளர்களை எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பினர் ஏற்க மறுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பல மாவட்டங்களில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே நேரடி மோதல்களும், உட்கட்சிப் பூசல்களும் வெடித்து அதிமுகவை தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.
புனேவில் உள்ள பிரபல ‘சோஷியல்’ (Social) உணவகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரபல இன்ஃப்ளூயன்ஸரான ரிஷிகா தத்தா என்பவர்,…
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கோருகொண்ட மண்டலத்திற்குட்பட்ட காதராடா கிராமத்தைச் சேர்ந்த ராமவரபு ராஜு என்பவருக்கும், அவரது மனைவிக்கும்…
பிரதமர் நரேந்திர மோடியின் அபுதாபி பயணத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஒரு "முக்கிய…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள பாஸ்னி மனணா கிராமத்தில், சசுரார் (மாமனார்) இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழந்த நெகிழ்ச்சியான மற்றும்…
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) விளக்கம் கேட்டதால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான…
மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து, உள்நாட்டுச்…