அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் வரவேண்டும் என்ற இபிஎஸ் அழைப்பை சிபிஎம் நிராகரித்துள்ளது. நேற்று வரை கம்யூனிஸ்டுகளை காணோம் என்று கூறிய இபிஎஸ் இன்று அழைப்பு விடுத்திருப்பது இரத்தின கம்பள வரவேற்பு அல்ல, வஞ்சக வலை என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இபிஎஸ் அழைப்பை நிராகரித்த நிலையில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிராகரித்துள்ளது.
