உடைந்த கோட்டை… பாய்ந்த தவெக…. காலியான 2 தொகுதிகளில் அதிமுக களமிறங்குமா?…. பரபரக்கும் கள நிலவரம்….!

By Nanthini on புரட்டாதி 8, 2026

Spread the love

சமீபத்தில் காலியான இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் முறைப்படி அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியிருந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து பின்னடைவைக் கண்டுவரும் அதிமுக, தங்களின் கைவசம் இருந்த இந்தத் தொகுதிகளை மீண்டும் தக்கவைத்துக்கொண்டு தனது பலத்தை நிரூபிக்குமா அல்லது இந்த சவாலான சூழலில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ள எதிர்க்கட்சிகளிடம் தொகுதிகளை இழக்குமா என்ற பெரிய கேள்வி தற்போது தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.