நான் நிரபராதின்னு நிரூபிச்சிட்டு தான் இங்கே நிக்குறேன்… மக்களுக்காக உழைச்சவன் நான்…. செய்தியாளர் சந்திப்பில் சூடான EPS…!!

By Soundarya on தை 6, 2026

Spread the love
“நான் நிரபராதி என்று நிரூபித்துவிட்டுத்தான் உங்கள் முன்னால் நிற்கிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து திமுக அரசின் ஊழல் பட்டியலை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் குறித்துப் பேசினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தன் மீது போடப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமாகத் தனது நேர்மையை நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தன் மீதோ அல்லது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதோ சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கைச் சிதைக்க திமுக அரசு செய்யும் முயற்சி இது என்றும் அவர் சாடினார். “மக்களுக்காக உழைத்தவன் நான், எதற்கும் அஞ்சமாட்டேன்” என்ற தொனியில் அவரது பேச்சு அமைந்திருந்தது.