தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிவாகை சூட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அதற்காக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார். இபிஎஸ்க்கு போட்டியாக அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையனும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் திமுகவிற்கு எதிராக ஒருமித்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்று இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சியை கூட்டணிக்கு வர வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைத்தது பாஜகவின் கருத்து என்ற அவர், திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்களுடன் வரலாம் என்று கூறியுள்ளார். NDA கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ்ஐ இணைப்பது குறித்து நாளை பியூஸ் கோயல் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இபிஎஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
