தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. குறிப்பாக இந்த தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் இ பி எஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளன. அவருக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி விவகாரம் நீடித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தால் மறுபக்கம் பாஜக கூட்டணி ஆட்சி தான் என்று கூறி வர இபிஎஸ் அதிர்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு வரும் கட்சிகளிடம் அதிமுகவே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தன்னை நேரில் சந்திக்க வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜகவுடன் இருந்தால் மட்டும் போதும் யார் யார் கூட்டணியில் இணையலாம் என அதிமுகவே முடிவெடுக்கும் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை டெல்லி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பரபரப்பாகவே உள்ளது.
