PF உச்சவரம்பை EPFO உயர்த்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது PF பிடிக்க உள்ள சம்பள உச்ச வரம்பை 15,000 ரூபாயிலிருந்து 25000 ரூபாயாக உயர்த்தவும், வரும் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் இது அமலுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் மணி கண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது. அப்படி நடந்தால் தற்போது 1800 ரூபாய் (12%) ஆக உள்ள அதிகபட்ச pf பிடித்த 3000 ரூபாயாக உயரும். இதனால் பணியாளர்களின் பிஎஃப் தொகை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
