தமிழக மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து ஆராய முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் வாக்குறுதியின்படி, இந்தத் தொகையை உயர்த்துவது குறித்தும், அதனைச் செயல்படுத்துவதற்கான கால அவகாசம் குறித்தும் அவர் நிதித்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்த மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது தொடர்பான முதலமைச்சரின் இந்த புதிய ஆலோசனை, தமிழகப் பெண்களுக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தியாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது.
