உலகம் முழுவதும் விமான விபத்து என்பது அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி மெக்சிகோவில் நடந்த ஒரு தனியார் விமான விபத்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பசிபிக் கடற்கரை நகரமான அகாபுல்கோவிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இரண்டு ஊழியர்கள் மற்றும் 8 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து விமானி சுதாகரித்தார். உடனடியாக விமானத்தை அங்கிருந்த கால்பந்து மைதானத்தில் அவசரமாக தரையிறக்க முயன்ற போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீ பற்றி நொறுங்கியது.
இந்த விபத்து மெக்சிகோ நகரத்திலிருந்து மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், டோலுகா விமான நிலையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் நடந்தது. விபத்துக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகளில் ஏழு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விபத்து நடந்த பகுதியை சுற்றியுள்ள சுமார் 130 பேர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…