நண்பனின் தங்கையைக் காதலித்த கொடூரம்.. எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீச்சு… கோவையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து, பலமுறை எச்சரித்தும் கண்ணன் அதற்குக் கட்டுப்படவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்த நிலையில், கண்ணனைத் தீர்த்துக்கட்ட பாரதிராஜா முடிவு செய்தார். இதற்காகத் தனது நண்பர்களான வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோரின் உதவியுடன், கடந்த ஜூன் 11-ஆம் தேதி கண்ணனை நியூ அம்மன் நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டிற்குத் தனியாக வரவழைத்துள்ளார்.

அங்கு ஏற்கனவே பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்களான ருத்தீஷ், நசீர் உசேன் ஆகியோர் கூடியிருந்தனர். அவர்கள் கண்ணனிடம் காதலைக் கைவிடுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கண்ணன் அதற்கு மறுக்கவே, ஆத்திரமடைந்த கும்பல் அவரைச் சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கொலையை மறைப்பதற்காக, கண்ணனின் உடலை அருகில் இருந்த ஒரு தோட்டக் கிணற்றில் வீசிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதற்கிடையில், ஜூன் 13-ஆம் தேதி மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் தோட்டக் கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த கண்ணனின் சடலத்தைப் போலீசார் மீட்டனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கண்ணன் கடைசியாக வசந்தகுமார் மற்றும் மணிகண்டனுடன் சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நண்பனின் தங்கையைக் காதலித்த முன்விரோதத்தால் கண்ணன் அடித்துக் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளியான பாரதிராஜா, ருத்தீஷ், வசந்தகுமார் மற்றும் நசீர் உசேன் ஆகிய நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தற்போது தலைமறைவாக உள்ள மணிகண்டனைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 minutes ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

7 minutes ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

13 minutes ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

17 minutes ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

19 minutes ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

26 minutes ago