“பாவம்… அது அமைதியா தானே இருந்துச்சு…” 12-வது மாடியில் இருந்து பூனையைத் தூக்கி வீசிய முதியவர்…! நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஆடி 28, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில் உள்ள ‘ரொயல் ஃபுளோரா’ என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில், பொதுவெளியில் அமைதியாக அமர்ந்திருந்த பூனை ஒன்றை முதியவர் ஒருவர் தூக்கி கீழே வீசிய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் முழுவதும் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமைதியாக இருந்த பூனை மீது இரக்கமின்றி இத்தகைய கொடூரச் செயலைச் செய்த நபர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கோரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பூனையின் நிலை குறித்த மேல் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.