அருப்புக்கோட்டை தொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் பேசுகையில், “அருப்புக்கோட்டை நகரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. அடுத்த வருடம் தேர்தலில் இந்த தொகுதி வெற்றிக்கு இந்த மக்களுடைய எழுச்சியே சாட்சி. இந்த பகுதி மக்களுக்கு விவசாயம், நெசவு, பிரதான நெசவாளர்கள் இன்னல்களை களைய பல திட்டங்களை கொடுத்தோ.ம் அவற்றில் சிலவற்றை சொல்கிறேன். விலையில்லா மின்சாரம், பசுமை வீடுகளை கொடுத்தோம். கைத்தறியில் தொழில் மேம்பாட்டுக்கு கைத்தறி ஆதரவு திட்டத்தை கொடுத்தோம்.
கொரோனா காலத்தில் விலையில்லாமல் ரேஷன் கடையில் பொருட்கள் கொடுத்தோம். அம்மா உணவகம் மூலம் விலையில்லா உணவு கொடுத்தோம். மூடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தொடரும். ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். டாஸ்மாக் என்றால் பத்து ரூபாய் செந்தில் பாலாஜி தான் ஞாபகத்துக்கு வருவார். மதுக்கடையில் பத்து ரூபாய் அதிக வசூல் செய்து அதில் மேல் இடத்திற்கு போகிறதாம் .வருடத்திற்கு 5400 கோடியும், நான்கு ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாயும் கொள்ளையடித்துள்ளார்கள். ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறையே விசாரணை செய்தது என்று பேசியுள்ளார்.
