அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியின் மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கொந்தளித்தனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்பி வேலுமணி தலைமையில் சுமார் 25 எம்எல்ஏ-க்கள் தனி அணியாகத் திரண்டு எடப்பாடிக்கு எதிராகத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர். இந்த உட்கட்சிப் பிளவு தற்போது அதிமுகவை இரண்டாக உடைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
இந்த மோதல் போக்கின் உச்சமாக, எடப்பாடி பழனிசாமியின் உத்தரவையும் மீறி எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட 25 எம்எல்ஏ-க்கள் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்தச் சம்பவம் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. அதுமட்டுமல்லாமல், கட்சியை வலுப்படுத்த நீக்கப்பட்ட சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல்களும் கட்சிக்குள் பலமாக ஒலிக்கத் தொடங்கின. இதனால் கடும் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிரடி ஆக்ஷனில் இறங்கினார்.
முதற்கட்டமாக, தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் தொடர்புடைய எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 மாவட்டச் செயலாளர்களைக் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்குப் பதிலாகப் புதிய மாவட்டச் செயலாளர்களையும் உடனடியாக நியமித்தார். இருப்பினும், லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் மீது மட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், தவெக-விற்கான தங்களது ஆதரவு நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று எஸ்பி வேலுமணி தரப்பு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நீக்கப் படலம் தற்போதும் தொடர்ந்து வருகிறது. இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பி.கே. வைரமுத்து மற்றும் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் சி. கிருஷ்ண முரளி ஆகிய இருவரையும் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுகவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது. இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக…
தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று,…
திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் கராத்தே முத்துக்குமார் ஆகியோர் மீது,…
தமிழகப் பள்ளிப் பாடநூல் தயாரிப்பிற்கான புதிய குழுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.டி. அனந்த்ஜித் நியமிக்கப்பட்டுள்ள விவகாரம்…
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, IUML ஆகிய கட்சிகள்…