“ஆட்சியே வேண்டாம், கட்சி மட்டும் போதும்”…. எடப்பாடியின் ‘வில்லங்க’ திட்டம்… பிண்ணனியில் ரகசிய டீலிங்… கதிகலக்கும் தமிழக அரசியல்…..!

By Nanthini on பங்குனி 7, 2026

Spread the love

தமிழக அரசியலில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும், பாஜக மேலிடத்திற்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை மீண்டும் வலுவான சக்தியாக மாற்ற ஓ.பி.எஸ், சசிகலா போன்ற பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்ற பாஜகவின் விருப்பத்தை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தை விட, கட்சி தன் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதுடன், கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளைத் தவிர்த்து வரும் அவரது பிடிவாதம் பாஜகவை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்காமல், அறிக்கைகளுடன் நிறுத்திக் கொள்வது, இருவருக்கும் இடையே ஏதோவொரு ‘ரகசிய உடன்பாடு’ இருப்பதாக பாஜக தரப்பில் சந்தேகம் எழுப்பியுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசு மெத்தனமாக இருப்பதும், எடப்பாடி பழனிசாமி மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. டெல்லி பாஜக வழங்கிய தேர்தல் நிதியைச் செலவிடாமல் பதுக்கி வைத்துள்ளதாக எழும் குற்றச்சாட்டுகள், அவரது செயல்பாடுகள் மீது மேலிடத்திற்கு இருக்கும் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளன.

   

ஜெயலலிதா காலத்தில் கட்சியில் இருந்து வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவுகளுக்குப் பணம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது போட்டியிடவே ஒவ்வொருவரிடமும் தலா ரூ.15 கோடி வரை எடப்பாடி பழனிசாமி கேட்பதாக வரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், தான் முன்னாள் அமைச்சராக இருந்த காலத்தில் பெற்றதாகச் சொல்லப்படும் கோடிக்கணக்கான ரூபாய் தொடர்பான அழுத்தங்கள் வரக்கூடும் என்பதாலேயே, அவர் மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பவில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது. கட்சி மூலம் சம்பாதித்து, அதிமுகவை மட்டும் தன் வசப்படுத்தினால் போதும் என்ற அவரது வியூகம், கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

   

இந்த விவகாரத்தில் அமித் ஷா உள்ளிட்ட டெல்லி பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமி மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதாகவும், இரு தரப்புக்கும் இடையிலான உறவு தற்போது பகிரங்கமான அதிருப்தியை எட்டியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவை வலுப்படுத்துவதை விட, தன் அதிகாரத்தைத் தக்கவைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் எடப்பாடியின் இந்த ‘வில்லங்க வியூகம்’, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.