தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் இந்த முறையும் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ள நிலையில் தனது கூட்டணியை பலப்படுத்தி வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவை எப்படியாவது தமிழகத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்.
இப்படியான நிலையில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார். இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போதும் அதிகாரிகளை அழைத்து முதல்வர் ஸ்டாலின் நாடகம் நடத்தியதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். சிவகங்கை பிரச்சார கூட்டத்தில் பேசிய இபிஎஸ், புயல் வெள்ளமா வந்துவிட்டது. அப்படி என்ன அவசரம் என கேள்வி எழுப்பினார். அதோடு இவர்தான் நாட்டு மக்களை காப்பாற்றுவது போன்று நடிக்கிறார். சிவாஜியால் கூட இந்த அளவுக்கு நடிக்க முடியாது என்று ஸ்டாலினை தாக்கி பேசினார்.
