“பேச மட்டும் தான் கூப்பிட்டோம்.. சீட் கிடையாது”… காளியம்மாளுக்கு எடப்பாடி போட்ட அதிரடி செக்?… அதிமுகவில் இணைந்த கையோடு காளியம்மாளுக்கு நேர்ந்த கதி…!

Spread the love

நாம் தமிழர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராகவும், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் வலம் வந்த காளியம்மாள், சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு அக்கட்சியிலிருந்து விலகினார். தமிழக அரசியலில் தவெக அல்லது திமுகவில் அவர் இணைவார் எனப் பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், கடந்த 13-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த அவர், எளிய மக்களிடம் எடுபடும் வகையில் பேசும் ஆற்றல் கொண்டவர் என்பதால், அதிமுகவின் வருகை அவருக்கு ஒரு பெரிய அரசியல் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

காளியம்மாள் அதிமுகவில் இணைந்தவுடன், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அவர் நாகப்பட்டினம் அல்லது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் எனப் பலமாகப் பேசப்பட்டது. குறிப்பாக, பூம்புகார் அல்லது மயிலாடுதுறை தொகுதிகள் அவருக்கு ஒதுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மயிலாடுதுறை தொகுதி கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒதுக்கப்பட்டதோடு, பூம்புகார் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் களத்தில் போட்டியிடும் காளியம்மாளின் கனவு தற்காலிகமாக கலைந்துள்ளதாகத் தெரிகிறது.

மூத்த நிர்வாகிகளையும், பல ஆண்டுகளாகத் தொகுதியில் உழைத்து வரும் நிர்வாகிகளையும் பகைத்துக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி விரும்பாததே காளியம்மாளுக்குச் சீட் மறுக்கப்பட்டதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மேலும், காளியம்மாளிடம் தேர்தலைச் எதிர்கொள்ளத் தேவையான பெரும் நிதி வசதி இல்லாததும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. கட்சி மேலிடம் அவரைத் தற்போது ஒரு வேட்பாளராகப் பார்ப்பதை விட, தமிழகம் முழுவதும் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்யும் ஒரு வலிமையான பேச்சாளராகப் பயன்படுத்தவே அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

தற்போது அதிமுகவில் மக்களிடையே செல்வாக்கு மிக்கப் பெண் பேச்சாளர்கள் குறைவாகவே உள்ளனர். இந்த இடைவெளியைக் காளியம்மாள் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் போன்ற முக்கியப் பதவிகள் அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், வரும் தேர்தலில் அவர் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்பதில் சந்தேகமில்லை.

Nanthini

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

3 மணத்தியாலங்கள் ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

3 மணத்தியாலங்கள் ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

4 மணத்தியாலங்கள் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

4 மணத்தியாலங்கள் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

4 மணத்தியாலங்கள் ago