உழவன் சோற்றில் கால் வைத்தால் தான்… எவ்வளவு கோடீஸ்வரனா இருந்தாலும் சோத்துல கை வைக்க முடியும்… எடப்பாடி விமர்சனம்..!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். “உழவன் சேற்றில் கால்வைத்தால்தான், எத்தனை பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் சோற்றில் கைவைக்க முடியும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமை தூக்கும் ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவது போல, தமிழக விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் த.வெ.க அரசுக்குத் தனது கடுமையான கண்டனத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தற்போதைய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக இந்த வஞ்சனை என்ற தலைப்பிலான கண்டனம் அமைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நிர்வாகம் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்களின் விமர்சனங்களை அண்மைக்காலமாகத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.