BREAKING: ED ரெய்டு… வசமாக சிக்கிய அமைச்சர் ஐ. பெரியசாமி மகன்… அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஆவணி 16, 2025

Spread the love

கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 2.13 கோடி சொத்து சேர்த்ததாக DVAC வழக்கு பதிந்தது. இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த HC, ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக SC இல் அமைச்சர் மேல் முறையீடு செய்துள்ள நிலையில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகின்றது. அதிகாலை முதல் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் அமைச்சர் மகனும் பழனி எம்எல்ஏவுமான செந்தில்குமார் அறையின் பூட்டை உடைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு முக்கிய ஆவணங்களை எடுக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. அறை பூட்டப்பட்டு உள்ளதால் 3 மணி நேரமாக அறைக்கு வெளியே அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அங்கு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டால் அமைச்சரோடு சேர்ந்து அவருடைய மகனும் விசாரணை மலையத்திற்குள் சிக்குவார் என தெரிகிறது.