குளிர்காலத்தில் மக்கள் கோடை காலத்தைவிடக் குறைவாகவே தண்ணீர் குடிக்கின்றனர். ஆனால், குளிர்ந்த காற்று தாகத்தின் உணர்வை 40% வரை அடக்குவதாலும், சூடான ஈரப்பதம் மூச்சுக்காற்று வழியாக வெளியேறுவதாலும், நம்மை அறியாமலேயே உடல் மெதுவாக நீரிழப்புக்குள்ளாகிறது. ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமம், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் உற்சாகமான உடல் செயல்பாடு போன்றவற்றுக்கு நீர்ச்சத்தம் மிகவும் அவசியம். நாம் குடிக்கும் நீரை உடலில் தக்க வைத்துக் கொள்ள எலக்ட்ரோலைட்டுகள் (தாதுக்கள்) தேவைப்படுகின்றன.
சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற இந்தத் தாதுக்கள் இல்லாமல், உடல் திரவங்களை வேகமாக வெளியேற்றிவிடும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. எனவே, நீரிழப்பைத் தவிர்க்க, நாள் முழுவதும் சிறிது சிறிதாகத் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும், வெறும் தண்ணீருக்குப் பதிலாக, சூப், லேசான சுவையூட்டப்பட்ட நீர் அல்லது எலக்ட்ரோலைட் கலந்த பானங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவது சிறந்தது. இது உடலின் ஆற்றலைப் பராமரிப்பதுடன், சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
