‘‘நான் அட்வகேட் வந்துருக்கேன்”… பூட்டிய கதவு.. ஓட்டை வழியாகப் பார்த்த போலீஸ்… எ.வ.வேலு வீட்டில் நடந்தது என்ன?… பதறவைக்கும் பின்னணி…!

Spread the love

திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை இல்லம் மற்றும் அலுவலகங்கள் உட்பட மொத்தம் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் எ.வ.வேலு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது, நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ‘அறப்போர் இயக்கம்’ ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து இந்த அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள எ.வ.வேலுவின் வீட்டின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு, போலீசார் தீவிர ஆவணச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் எ.வ.வேலுவை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக அவரது சென்னை இல்லத்திற்கு வருகை தந்தார். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், அவர் கதவைத் திறந்து உள்ளே செல்ல முயன்றார். அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு, உள்ளே இருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கதவின் துளை வழியாகப் பார்த்தனர்.

அப்போது அதிகாரிகளிடம் பேசிய வழக்கறிஞர் சரவணன், ”சார்.. நான் அட்வகேட் சரவணன் வந்திருக்கிறேன், அண்ணன் எ.வ.வேலுவை பார்க்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு அதிகாரிகள், ”இப்போது பார்க்க முடியாது சார், சோதனை நடைமுறைகள் அனைத்தும் முடிவடையட்டும், அதன்பிறகு வந்து பேசுங்கள்” என்று மறுப்பு தெரிவித்தனர். ஆனாலும் விடாத வழக்கறிஞர், ”சோதனை எப்போது முடியும்? வேலு அண்ணன் உள்ளேதான் இருக்கிறாரா, அவருடன் யாரெல்லாம் இருக்கிறார்கள்?” என்று அடுத்தடுத்து வினாக்களை எழுப்பினார்.

அதற்கு அதிகாரிகள், எ.வ.வேலுவும் அவரது குடும்பத்தினரும் உள்ளேதான் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தினர். தொடர்ந்து, ”அண்ணன் கரெக்ட்டா இருக்கிறாரா என்று பார்த்துவிட்டு மட்டும் போகிறேன்” என்று சரவணன் கேட்க, அதிகாரிகள் எதற்கும் இடமளிக்காமல், ”எதுவாக இருந்தாலும் நடைமுறை முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளுங்கள்” என கறாராகக் கூறிவிட்டனர். எ.வ.வேலுவைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், திமுக வழக்கறிஞர் சரவணன் வீட்டின் வெளியேயே நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது. இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

2 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

8 minutes ago

மதிமுக வெளியேறியதற்கு இதுதான் காரணமா..? திருமண விழாவில் ஸ்டாலின் – வைகோ இடையே நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…

11 minutes ago

பரபரப்பு..! “எங்களை ஏன் கேவலமா பேசினீங்க..? ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை… வேதனையில் நொறுங்கிப்போன வைகோ… பரபரப்பு குற்றசாட்டு..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…

16 minutes ago

“ராஜினாமா செய்யுங்கள் நான் பாத்துக்குறேன்” வாக்குறுதி கொடுத்த விஜய்…? செம மகிழ்ச்சியில் வைகோ…!!

மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…

25 minutes ago

அலட்சியத்தால் ஒரு உயிரே போச்சே..! காதில் ப்ளூடூத் இயர்போன்… கையில் மொபைல் போன்.. அலட்சியமாக ஊசி போட்ட செவிலியர்… துடிதுடித்து உயிரிழந்த நோயாளி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக…

33 minutes ago