rat

விஞ்ஞானிகள் ஆய்வில் கார் ஓட்ட கற்றுக்கொண்ட எலிகள்…. இதற்கும் மனிதருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது தெரியுமா…?

By Meena on டிசம்பர் 24, 2024

Spread the love

ஒவ்வொரு நாளும் விஞ்ஞானிகள் ஒவ்வொரு ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். அதனால் பலவித கண்டுபிடிப்புகள் உருவாகிறது. என்னதான் விலங்குகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளக்கூடாது என்று பீட்டா போன்ற அமைப்புகள் கூறினாலும் எலிகளை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகிறது. அந்த ஆய்வுகளின் முடிவுகள் மனித செயல்பாட்டின் உடன் ஒப்பிடப்படுகிறது. அதனால் பலவித மாற்றங்களும் ஏற்படுகிறது. அப்படி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் எலிகள் கார் ஓட்ட கற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மனிதர்களுக்கான ஒரு செயல்பாட்டை கண்டுபிடித்து கூறியிருக்கிறார்கள். அது என்னவென்று காண்போம்.

   

முதலில் விஞ்ஞானிகள் தானியங்களை சேமித்து வைக்க பயன்படும் சிறிய பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் லீவர் போன்ற ஆக்சிலேட்டரை வடிவமைத்த காரை எலிகளின் முன்னே சிறு தொலைவில் உணவுப் பொருட்களை வைத்திருக்கிறார்கள். சிறிது நேரம் அங்கும் இங்கும் சென்ற எலிகள் பின்னர் அந்த பெட்டியில் அமர்ந்து ஆக்சலேட்டரை அமுக்கி உணவு இருக்கும் திசையில் துல்லியமாக காரை ஓட்டியிருக்கிறது.

   

இதில் இரண்டு விதமான எலிகளை வைத்து சோதித்து இருக்கிறார்கள். முதலில் கூண்டுக்குள் இருந்த எலிகளையும் மற்றொன்று பொம்மைகள் சக எலிகள் கொண்ட சிறந்த சூழலில் இருந்த எலிகளை வைத்து சோதித்து இருக்கிறார்கள். கூண்டுக்குள் இருக்கும் எலிகளை விட மகிச்சியான சூழலில் இருந்த எலிகள் காரை ஓட்ட அதிக ஆர்வம் காட்டியிருக்கிறது. வேகமாக ஓட்டியிருக்கிறது. இது நியூரோபிளாஸ்டிக்சிட்டி எனப்படும் சவாலான சூழ்நிலைகளில் மூளை வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு உதவுகிறது என்ற யோசனையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

 

இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பிறகு நரம்பியல் ஆய்வாளர்கள் அடுத்த கட்டமாக விலங்குகளின் இயற்கையான வாழ்விடங்களில் வைத்து சோதனை செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்து இருக்கிறார்கள். எலிகள் கார் ஓட்ட கற்றுக்கொள்வது எந்த பயனும் இல்லாத ஒரு செயல் என்றாலும் அவை எவ்வாறு புதிய திறன்களை பெறுகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு ஒரு வழியாக பார்க்கிறார்கள். ஒரு உளவியல் ரீதியான மாற்றங்களை இது கொண்டிருக்கிறது.

இந்த சோதனையை மனிதர்களுடன் ஒப்பிடும்போது விருப்பமில்லாத ஒரு சூழலில் ஒரு நபர் இருக்கும் போது ஒரு புது செயலை கற்றுக் கொள்ளும் போது அது நல்ல ஒரு பயனை தராது. ஆனால் நாம் பிடித்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்யும்போது ஆர்வத்தோடு செய்யும்போது அதனால் கிடைக்கும் ரிசல்ட் ஆனது மிகவும் நல்ல முறையில் இருக்கிறது என்று நரம்பியல் ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். மனித மூளை ஆனது ஒரு நல்ல சூழ்நிலையில் இருக்கும் போது எவ்வித சவால்களையும் சமாளிக்க முடியும் என்பது இதிலிருந்து தெரிகிறது.