#image_title
இன்றைய உலகில் வினோதமான சம்பவங்கள் நடக்கிறது. அதேபோல் சாதனையாளர்களும் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு சில செயல்கள் மீது ஆர்வம் இருக்கும். ஏதாவது ஒரு வகையில் சாதித்து வெளியில் தெரிய வேண்டும் கின்னஸில் அல்லது லிம்காவில் இடம்பெற வேண்டும் என்று விரும்பி செய்வர்.
அதேபோல ஆரம்கேவியில் 50,000 கலர் பட்டு சேலை அதிக எடை கொண்ட தங்க நகைகள் போன்று தமிழ்நாட்டில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். அதேபோல ஒரு வித்தியாசமான வெள்ளி பொருளை செய்து சாதனை படைத்திருக்கிறார்கள் அதை பற்றி இனி காண்போம்.
சென்னையைச் சேர்ந்த சுக்ரா ஜுவல்லரி நிறுவனம் கின்னஸ் சாதனை புரிவதற்காக சுமார் 160 கிலோ எடையுடன் ரூபாய் மூன்றரை கோடி மதிப்பிலான வெள்ளியிலான பீரோவை தயாரித்திருக்கிறார்கள். இந்த பீரோவின் உயரம் 7 அடி அகலம் 3 அடி ஆகும். உலகிலேயே முதல்முறையாக வெள்ளியில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அலமாரி என்ற பிரிவின் கீழ் இதற்கு கின்னிஸ் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த வெள்ளி அலமாரியை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் துணைவியார் ஆன துர்கா ஸ்டாலின் திறந்து வைத்தார். மிகுந்த கைவினை வேலைப்பாடுகளுடன் இந்த அலமாரி ஜொலிக்கிறது. இதை பார்த்து வியந்து பாராட்டினார் துர்கா ஸ்டாலின். தற்போது இது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…